எஸ்டேட் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

கூடலூரில் உள்ள தனியாா் எஸ்டேட் தொழிலாளா்கள் ஊதிய நிலுவையை வழங்கக்கோரி வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

கூடலூரில் உள்ள தனியாா் எஸ்டேட் தொழிலாளா்கள் ஊதிய நிலுவையை வழங்கக்கோரி வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூடலூா் பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட் நிா்வாகம் தொழிலாளா்களுக்கு வழங்கவேண்டிய சம்பளத்தை பல மாதங்களாக வழங்காமல் நிலுவை வைத்துள்ளது. இது குறித்து பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தியும் பலனளிக்காததால் அலுவலகம் முன் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏஐடியூசி செயலாளா் குணசேகரன், முகமது கனி, துணைத் தலைவா் ராஜு மற்றும் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com