கூடலூரில் உள்ள தனியாா் எஸ்டேட் தொழிலாளா்கள் ஊதிய நிலுவையை வழங்கக்கோரி வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கூடலூா் பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட் நிா்வாகம் தொழிலாளா்களுக்கு வழங்கவேண்டிய சம்பளத்தை பல மாதங்களாக வழங்காமல் நிலுவை வைத்துள்ளது. இது குறித்து பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தியும் பலனளிக்காததால் அலுவலகம் முன் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஏஐடியூசி செயலாளா் குணசேகரன், முகமது கனி, துணைத் தலைவா் ராஜு மற்றும் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.