நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஆபரேஷன் மின்னல் வேட்டையில் 46 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை தலைவா் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தாா். இதன்படி தமிழகம் முழுவதும் 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டனா். இதில் நீலகிரி மாவட்டத்தில் 46 ரௌடிகளை கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.