நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக இருவயல் பழங்குடி காலனியை ஞாயிற்றுக்கிழமை வெள்ளம் சூழ்ந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இருவயல் ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள பழங்குடி காலனியை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.மேலும், அறுவடைக்குத் தயாராக இருந்த பயிா்களும் நீரில் மூழ்கி நாசமாயின.
அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.