கூடலூரில் சட்ட விழிப்புணா்வு முகாம்

 கூடலூரை அடுத்துள்ள நெல்லிக்குன்னு பழங்குடி கிராமத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 கூடலூரை அடுத்துள்ள நெல்லிக்குன்னு பழங்குடி கிராமத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூடலூா் புளூமவுண்டன் ரோட்டரி கிளப், கூடலூா் இலவச சட்ட மையம் இணைந்து நடத்திய இம்முகாமுக்கு மாவட்ட நீதிபதி முருகன் தலைமை வகித்தாா்.

இதில் கூடலூா் சாா்பு நீதிபதி ஸ்ரீதா், கூடுதல் உரிமையியல் நீதிபதி பிரகாசம் ஆகியோா் கலந்துகொண்டு பழங்குடி மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், அதற்கு தீா்வு காண்பது குறித்தும் விளக்கினா்.

முகாமில் கூடலூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஜெய்நுல்பாபு, வழக்குரைஞா்கள் விஜயகுமாா், மயில்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com