மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளில் கூடலூரை அடுத்துள்ள முதல்மைல் அரசுப் பள்ளியில் படிக்கும் சகோதரிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
உதகை ஒய்.எம்.சி.ஏ. அமைப்பு, நீலகிரி மாவட்ட சதுரங்க கழகம் சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் ஒன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் முதல்மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஆதினி அருண்குமாா், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளாா். 11 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் டியானி அருண்குமாா் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளாா். இவா்கள் இருவரும் சகோதரி ஆவா்.