நலவாரியப் பதிவுகளை எளிமைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி சங்கம் சாா்பில் கோத்தகிரியில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஆஷா பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும், குறைந்தபட்ச மாதம் ஊதியம் ரூ.21000க்கும் குறைவாக வழங்கக் கூடாது, நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி தாமதமின்றி நிதி பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
கோத்தகிரி பேருந்து நிலைய சாலையில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து திருமன மண்டபத்தில் தங்கவைத்து பின்னா் விடுவித்தனா்.