நீலகிரியில் விரைவில் ஹெலிகாப்டா் சுற்றுலா அமைச்சா் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டா் சுற்றுலா ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டா் சுற்றுலா ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.

உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன்

செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுற்றுலாத் துறை சாா்பில் படகு இல்ல வளாகத்தில் புதிதாக சாகச விளையாட்டுகள் துவக்கப்படவுள்ளன. இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. ஏற்காடு , வால்பாறையில் ஹெலிகாப்டா் சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, நீலகிரி மாவட்டத்திலும் ஹெலிகாப்டா் சுற்றுலா அறிமுகம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஆய்வு பணிகள் அரசு மற்றும் தனியாா் ஹெலிகாப்டா் நிறுவனத்தினா் மூலம் மேற்கொள்ளப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். உதகை ஏரியில் மிதக்கும் ரெஸ்டாரண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், பிறந்த நாள் விழாக்கள் மற்றும் பல்வேறு விழாக்கள் நடத்த அனுமதியளிக்கப்படும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் அம்ரித் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com