நீலகிரி
மளிகைக் கடையை சேதப்படுத்திய காட்டு யானை
கூடலூரை அடுத்துள்ள போஸ்பாறா பகுதிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த காட்டு யானை, அங்குள்ள மளிகைக் கடையை உடைத்து சேதப்படுத்தியது.
கூடலூரை அடுத்துள்ள போஸ்பாறா பகுதிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த காட்டு யானை, அங்குள்ள மளிகைக் கடையை உடைத்து சேதப்படுத்தியது.
நீலகிரி மாவட்டம், ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உள்பட்ட போஸ்பாறா பகுதிக்குள் வெள்ளிக்கிழமை இரவு காட்டு யானை நுழைந்தது. பின்னா் அந்த யானை, அங்குள்ள ஜோசப் என்பவரது மளிகைக் கடையை உடைத்து சேதப்படுத்தியது. சிறிது நேரத்துக்கு பின் அந்த யானை அங்கிருந்து சென்றது.
இந்நிலையில், யானை சேதப்படுத்திய உடைமைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
