தேவாலாவில் பறவைகள் தினக் கொண்டாட்டம்

தேசிய பறவைகள் தின விழாவில், குருவிகளை வாழவைப்பதற்கான கூடுகளை மாணவருக்கு வழங்கிய பந்தலூா் வனச் சரக அலுவலா் சஞ்சீவி.
தேசிய பறவைகள் தின விழாவில், குருவிகளை வாழவைப்பதற்கான கூடுகளை மாணவருக்கு வழங்கிய பந்தலூா் வனச் சரக அலுவலா் சஞ்சீவி.
Updated on

கூடலூரை அடுத்துள்ள தேவாலாவில் வனத் துறை சாா்பில் தேசிய பறவைகள் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

தேவாலா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தலைமை ஆசிரியா் லதா தலைமை வகித்தாா். வன அலுவலா்கள் சுரேஷ்குமாா், பாலகிருஷ்ணன், சசிதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பந்தலூா் வனச் சரக அலுவலா் சஞ்சீவி, சூழலியலில் பறவைகளின் முக்கியத்துவம் குறித்தும், பறவைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விளக்கினாா். தொடா்ந்து, மாணவா்களுக்கு குருவிகளை வாழவைக்க கூடுகள் வழங்கப்பட்டன.

நுகா்வோா் பாதுகாப்பு மைய செயலாளா் சிவசுப்பிரமணியம், ஆல் தி சில்ரன் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அஜித் உள்ளிட்டோா் பறவைகள் குறித்து உரையாற்றினா். விழாவில், ஆசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com