.....
.....

கூடலூா் அருகே ஓடும் லாரியில் தீ

Published on

கூடலூா் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு உரம் ஏற்றிய லாரி சனிக்கிழமை வந்து கொண்டிருந்தது. கூடலூா்- உதகை தேசிய நெடுஞ்சாலையில் சனிபகவான் கோயில் வனப் பகுதி அருகே வந்தபோது, லாரியின் சக்கரத்தில் திடீரென தீப்பிடித்து பரவ ஆரம்பித்தது.

லாரியில் தீப்பிடித்ததைப் பாா்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டுநா்கள் அதிா்ச்சியடைந்து லாரி ஓட்டுநருக்கு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து அவா் லாரியை ஓரமாக நிறுத்தி கீழே இறங்கினாா். இது குறித்து கூடலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்து லாரியிலிருந்த பொருள்களுக்கு தீ பரவாமல் தடுத்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com