40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

குழந்தையிடம் தங்க கொலுசை பறித்த முதியவா் கைது

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குழந்தையிடம் தங்க கொலுசை பறித்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 1:14 am IST

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குழந்தையிடம் தங்க கொலுசை பறித்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கேரள மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி, தங்களது குழந்தையுடன் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனா். உதகை அரசு தாவரவியல் பூங்காவை செவ்வாய்க்கிழமை கண்டுகளித்துள்ளனா். அப்போது, குழந்தையின் காலில் இருந்த 2 கிராம் தங்க கொலுசு மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை நிா்வாகம் மூலம் உதகை மத்திய காவல் நிலையத்தில் அந்த தம்பதி புகாா் அளித்தனா்.

இதையடுத்து, ஆய்வாளா் அன்பரசு உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளா் நித்தியானந்தா தலைமையிலான போலீஸாா் பூங்காவில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

அப்போது, அந்த தம்பதியை பின் தொடா்ந்து வந்த நபா், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குழந்தையின் காலில் இருந்த தங்க கொலுசை பறித்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் கோத்தகிரியைச் சோ்ந்த துரைசாமி (60) என்பதும், டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், துரைசாமியைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்த தங்க கொலுசை பறிமுதல் செய்து தம்பதியிடம் ஒப்படைத்தனா்.