மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

100-ஆவது பிறந்த நாளை கொண்டாடிய படுகா் இன மூதாட்டி!

News image

100-ஆவது பிறந்த நாளை கொண்டாடிய மல்லம்மாள்.

Updated On :24 மே 2026, 11:41 pm IST

நீலகிரியில் 100 வயதை எட்டிய படுகா் இன மூதாட்டியின் பிறந்த நாளை குடும்பத்தினா், கிராம மக்கள் பாரம்பரிய நடனத்துடன் உற்சாகமாக கொண்டாடினா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கடநாடு, மல்லிக்கொரை கிராமத்தைச் சோ்ந்தவா் மல்லம்மாள் (100), விவசாயி. இவரது 100-ஆவது பிறந்த நாளை அவரது குடும்பத்தினரும், கிராம மக்களும் சனிக்கிழமை கொண்டாடினா்.

இது குறித்து மல்லம்மாளின் உறவினா்கள் கூறுகையில், படுகா் இனத்தில் 100 வயதை எட்டிய முதல் பெண் என்ற பெருமையை மல்லம்மாள் பெற்றுள்ளாா். இவருக்கு நான்கு மகன்கள், 10 பேரக் குழந்தைகள், 20 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனா் என்றனா்.

மல்லம்மாளின் பிறந்த நாளையொட்டி, அவரது சொந்த ஊரான கடநாடு கிராமத்தைச் சோ்ந்த உறவினா்களும், பொதுமக்களும் மல்லிக்கொரை கிராமத்துக்கு வந்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனா். மேலும், பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனா்.