ஈஷா கல்வி அறக்கட்டளை மற்றும் டிக்ஸி நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளி உதவித் திட்டம் தொடக்க விழா திருப்பூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
ஈஷா கல்வி அறக்கட்டளை மற்றும் டிக்ஸி நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்து வருகின்றன. நடப்பு ஆண்டு தமிழகத்தில் 112 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு கல்வி வளர்ச்சிக்காக உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதில், திருப்பூர் மாவட்டத்தில் மண்ணரை, திம்மநாயக்கன்பாளையம், கருமாரம்பாளையம், ஊத்துக்குளி ஆர்.எஸ். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்கப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்துக்கான தொடக்க விழா, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. திட்டத்தை டிக்ஸி நிறுவன உரிமையாளர் பிரேம் சிக்கா, நிர்வாகி ரகுல் சிக்கா ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்வியாளர் ஆண்டவர் ராமசாமி, கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.