கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்குப் பணி

பணிக்காலத்தில் உயிரிழந்த மாநகராட்சிப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
Published on
Updated on
1 min read

பணிக்காலத்தில் உயிரிழந்த மாநகராட்சிப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
திருப்பூர் மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றிய இளங்கோ, பாலன், பரமேஸ்வரன் ஆகியோர் பணிக்காலத்தில் உயிரிழந்ததையடுத்து,அவரது வாரிசுகளான இளங்கோவின் மனைவி வள்ளி, பாலன் மகன் மதன்மணி, பரமேஸ்வரன் மகன் பார்த்தசாரதி ஆகியோருக்கு கருணை அடிப்படையில், துப்புரவுப் பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநகராட்சி தனி அலுவலர் மா.அசோகன் அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com