அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பினர் திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பினர் திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தும் முன், 6-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும், அனைத்து அரசு அலுவலர்களுக்கும் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com