மண், மணல் கடத்தல்: 3 லாரிகள் பறிமுதல்

காங்கயம் அருகே,  அனுமதி இல்லாமல் மண், மணல் ஏற்றி வந்ததாக 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காங்கயம் அருகே,  அனுமதி இல்லாமல் மண், மணல் ஏற்றி வந்ததாக 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காங்கயம் பகுதியில் கிராவல் மண் மற்றும் ஓடைக்கற்களை சிலர் கடத்துவதாக புகார் எழுந்தததையடுத்து,  காங்கயம் வட்டாட்சியர் மாணிக்கவேல் தலைமையில் வருவாய்த் துறையினர் வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். 
இந்த சோதனையின் போது,  முத்தூர் சாலை பகுதியில் வந்த லாரியை  தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அனுமதியின்றி லாரியில் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.  
இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்தனர். 
இதேபோல கரூர் சாலை-முத்தூர் பிரிவு அருகே அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட  3 லாரிகளும் காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com