திருப்பூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் வணிகர் வளர்ச்சித் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்திய அஞ்சல் துறை சார்பில் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தேசிய அஞ்சல் வார விழா அக்டோபர் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. திருப்பூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் வணிகர் வளர்ச்சித் தினத்தையொட்டி வணிகர்கள், வாடிக்கையாளர்கள் சந்திப்பு சனிக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருப்பூர் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் எஸ்.கோபிநாதன் தலைமை வகித்தார். இதில் வெளிநாடு, உள்நாடுகளுக்கு அஞ்சல் துறை மூலம் எளிய முறையில் கடிதங்கள், பார்சல் அனுப்புதல் உள்ளிட்ட அஞ்சல் சேவைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான வணிக நிறுவனத்தார், வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை தபால் தினம் கொண்டாடப்படுகிறது.