நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

தாராபுரம் அருகே நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் சனிக்கிழமை உயிரிழந்தன.

தாராபுரம் அருகே நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் சனிக்கிழமை உயிரிழந்தன.
தாராபுரம், சகுனிபாளையத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (50). இவர் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்குச் சென்று விட்டார்.  பின்னர் காலையில் வந்து பார்த்தபோது 10 ஆடுகள் உயிரிழந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கால்நடைத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் நாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com