பல்லடத்தில் தென்னை மரத்தில் இடி விழுந்து தீப் பற்றி எரிந்தது

பல்லடத்தில் தென்னை மரத்தில் சனிக்கிழமை இடி விழுந்ததில் மரம் தீப் பிடித்து எரிந்தது.   

பல்லடத்தில் தென்னை மரத்தில் சனிக்கிழமை இடி விழுந்ததில் மரம் தீப் பிடித்து எரிந்தது.   
பல்லடம், மங்கலம் சாலையில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் எதிரில் தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்குள்ள ஒரு தென்னை மரத்தில் சனிக்கிழமை மாலை பலத்த சத்தத்துடன் இடி விழுந்தது. இதில் பச்சை மரம் தீப்பிடித்து எரிந்தது.  இதுகுறித்து தகவலறிந்து வந்த பல்லடம் தீயணைப்புப் படையினர் இடி விழுந்த அந்த தென்னை மரத்தை கீழே சாய்த்து அகற்றினர். பல்லடம் வட்டாட்சியர் அருணா, வருவாய் ஆய்வாளர் சித்தையன் ஆகியோர் இடி விழுந்த மரத்தைப் பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com