ஊத்துக்குளி அருகே உள்ள சசூரி பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கலாசாரப் போட்டி (ஷாக்த்தியா 18) செவ்வாய்க்கிழமை கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கல்லூரி நிறுவனத் தலைவர் ஏ.எம்.கந்தசாமி தலைமை வகித்தார். கல்லூரி முதன்மைக் கல்வி அலுவலர் கே.சவிதா மோகன்ராஜ், கல்லூரி முதல்வர் கே.பாண்டிய ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவ்வாய், புதன் ஆகிய இருநாள்கள் நடைபெறும் கலாசாரப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.