தொழிலாளியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காங்கயம் ஒன்றிய திமுக சார்பில் ரூ. 20ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.
காங்கயம் அருகே துண்டுக்காடு ஜெ நகரில் வசிப்பவர் பிரகாஷ் (40), பெயின்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜானகி (35). இவர்களது மகன் யஷ்விந்த் (7).
இந்நிலையில், பிரகாஷுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது. மாற்றுச் சிறுநீரகம் பெருத்தினால்தான் அவர் உயிர் வாழமுடியும் என்ற நிலையில் பிரகாஷுக்கு அவரது சகோதரி தனது சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுக்க முன்வந்துள்ளார். ஆனால், மாற்றுச் சிறுநீரகம் பொருத்த ரூ. 8 லட்சம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையறிந்த காங்கயம் வேர்கள் அமைப்பினர் பிரகாஷுக்கு உதவ முன்வந்து நிதி திரட்டி வருகின்றனர். இந்நிலையில், காங்கயம் வடக்கு திமுக ஒன்றியச் செயலாளர் என்.எஸ்.சிதம்பரம், பிரகாஷ் இல்லத்திற்குச் சென்று ரூ. 20 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். வேர்கள் அமைப்பின் பொறுப்பாளர் வி.சங்கரகோபால், சிவன்மலை வேலுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... மீண்டும் உயிர்த்தெழ வேண்டும் கோயம்பேடு முனையம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

அரசின் நடவடிக்கைகளை பொறுத்தே இந்திய கம்யூ. அணுகுமுறை இருக்கும்: மு. வீரபாண்டியன்

குழப்பம் நீங்கும் விருச்சிக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
