வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கும் பணி

வாக்குச் சாவடிக்கு கொண்டுச் செல்லப்படும் வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்கும் பணி உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வாக்குச் சாவடிக்கு கொண்டுச் செல்லப்படும் வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்கும் பணி உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், வாக்குச் சாவடிக்கு கொண்டுச் செல்லப்பட உள்ள வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பணியாற்றும் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு வாக்காளர்கள் பட்டியல் கொடுக்கப்படுவது வழக்கம்.
இதன்படி உடுமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 295 வாக்குச் சாவடியிலும், மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 287 வாக்குச் சாவடிக்கும் கொடுக்கப்பட உள்ள வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்கும் பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.
மேலும், வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய வாக்குச் சீட்டுக்களை சரிபார்க்கும் பணிகளும் நடைபெற்றது. வட்டாட்சியர் தங்கவேலு,  மண்டல துணை வட்டாட் சியர் பொன்ராஜ் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் இந்தப் பணிகளில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com