பல்லடத்தில் அரசுப் பேருந்து மீது கல் வீசி கண்ணாடியை உடைத்த இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
மதுரையில் இருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பல்லடம் அருகே தாராபுரம் சாலையில் ஆலுத்துப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர் கல் வீசியதில் பேருந்தின் முகப்புக் கண்ணாடி வியாழக்கிழமை சேதமடைந்தன.
இது குறித்து பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பல்லடம் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வரும் கல்லம்பாளையம் பழனிசாமி மகன் கவின்சங்கர் (22) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.