உடுமலையில் அமமுக வேட்பாளர் பிரசாரம்

உடுமலை நகரில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.

உடுமலை நகரில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.
அக்கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்ட அமமுக மாவட்டச் செயலாளர் சி.சண்முகவேலு தலைமையில் பிரசாரம் நடைபெற்றது. உடுமலை நகரின் முக்கிய வீதிகளில் அமமுக பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் முத்துகுமாருக்கு பரிசுப் பெட்டி சின்னத்தில் வாக்கு சேகரித்தார். 
மேலும், அனைத்துப் பள்ளி வாசல்களிலும் தொழுகைக்கு வந்த முஸ்லிம் மக்களிடம் துண்டறிக்கைகள் கொடுத்து வாக்குச் சேகரித்தனர். அப்போது, மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் ச.ராஜ்குமார், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வி.சிவக்குமார், நிர்வாகிகள் பாட்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com