திமுக தேர்தல் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

தாராபுரம் திமுக தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம் திமுக தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் கணேசமூர்த்திக்கு ஆதரவாக தாராபுரம் அமராவதி சிலை அருகே பொள்ளாச்சி செல்லும் சாலையில் தற்காலிக தேர்தல் பணிமனை அலுவலகம்  அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் பணிமனையில் திங்கள்கிழமை காலை திமுக கூட்டணிக் கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 7 அடி கொண்ட சாரைப் பாம்பு ஒன்று கூட்டத்துக்குள் நுழைந்தது. இதனைப் பார்த்த கட்சி நிர்வாகிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கூட்டத்தின் நடுவே சென்ற பாம்பு அங்கிருந்த மண் புதரில் மறைந்து கொண்டது.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பைப் பிடித்தனர். இதனால், திமுக தேர்தல் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிடிக்கப்பட்ட சாரைப் பாம்பு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com