போஸ்கோ சட்டத்தின் கீழ் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

வெள்ளக்கோவில் போஸ்கோ சட்டத்தின் கீழ் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் போஸ்கோ சட்டத்தின் கீழ் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முத்தூர் சாலையில் உள்ள அறிவொளி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் கு.சங்கர் (22). கூலித் தொழிலாளி. அறிவொளி நகருக்கு அருகே உள்ள தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அந்தப் பள்ளியில் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவியை சங்கர் அடிக்கடி வழிமறித்து தகாத வார்த்தைகள் பேசி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். 
இந்தப் புகாரின் பேரில் போலீஸார் சங்கர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சங்கருக்கு போஸ்கோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com