காங்கயத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் பிரசாரம்

மக்களைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கேட்டு புரட்சிகர இளைஞர் முன்னணியினர் காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.

மக்களைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கேட்டு புரட்சிகர இளைஞர் முன்னணியினர் காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.
காங்கயம் நகர பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்தப் பிரசாரக் கூட்டத்துக்கு அமைப்பின் காங்கயம் பொறுப்பாளர் ப.கண்ணுசாமி தலைமை வகித்தார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரங்கள்:
தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து தேர்தல் தொடர்பாக எங்களது அமைப்பின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க துண்டறிக்கை விநியோகிக்கவும், தெருமுனைப் பிரசாரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. 
பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே பிரசாரத்துக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் ஜனநாயகம் வளர திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com