எஸ்.பி.ஐ. வங்கி கருவூலம் திறப்பு

திருப்பூர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி சார்பில் சிறப்பு வணிக கிளையில் கருவூலம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. 

திருப்பூர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி சார்பில் சிறப்பு வணிக கிளையில் கருவூலம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. 
திருப்பூர், பாரத ஸ்டேட் வங்கி சிறப்பு வணிக கிளையில் தொடங்கப்பட்ட கருவூலக அலுவலகத்தை சென்னை வட்டார முதன்மைப் பொதுமேலாளர் வினய் திறந்து வைத்தார்.
இதில், ஏ.இ.பி.சி., துணைத் தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த வங்கியில் 60 ஆண்டுகள் வாடிக்கையாளராக உள்ள ஜூபிடர் நிட்டிங் நிறுவன பங்குதாரர் கிருஷ்ணராஜ் கௌரவிக்கப்பட்டார்.
இந்தக் கருவூல வசதியை திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஏற்றுமதி வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com