பின்னலாடை தொழிலாளி அடித்துக் கொலை: 2 பேர் கைது

திருப்பூர், மங்கலம் சாலையில் பின்னலாடை தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில் காவல் துறையினர் 2 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 

திருப்பூர், மங்கலம் சாலையில் பின்னலாடை தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில் காவல் துறையினர் 2 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 
திருப்பூர், ராக்கியாபாளையம் பிரிவை;ஈ சேர்ந்தவர் கமலராஜன்( 40). இவர் பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய உறவினர் மங்கலம் சாலை தாடிக்கார முக்கு பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், மங்கலம் சாலையில் உள்ள தனது உறவினரை பார்க்க கமலராஜன் வெள்ளிக்கிழமை இரவு சென்றுள்ளார். பின்னர் அருகில் உள்ள சூப் கடைக்குச் சென்று விலையைக் கேட்டுள்ளார். 
அப்போது, கடை உரிமையாளர் விலையைக் கூறியபோது, அதிகமாக இருப்பதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த 4 பேரும் சேர்ந்து கமலராஜனை தாக்கி அருகில் உள்ள சாக்கடையில் தள்ளியுள்ளனர். 
இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் கமலராஜனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருப்பூர் மத்திய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், சூப் கடை நடத்தி வந்த ஆலங்காட்டைச் சேர்ந்த எஸ்.பிரபு (19), எம்.விஸ்வநாதன் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர். 
 மேலும், 2 சிறுவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com