வெள்ளக்கோவிலில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சார்பில் வரும் 23ஆம் நடைபெறும் கிருஷ்ண ஜயந்தி விழா குறித்து பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி சனிக்கிழமை பிரசாரம் செய்தனர்.
ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளக்கோவிலில் மூலனூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரும் 23 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணர், ராதை வேடமிட்டு குடும்பத்துடன் பங்கு பெறச் செய்து பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விôவில் அனைவரையும் பங்கேற்க வலியுறுத்தி விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பிரசாரம் செய்யப்பட்டது. இதில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட இணைச் செயலாளர் கே.சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.