கோயில் குளத்தில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க கோரிக்கை

திருமுருகன்பூண்டி ராசாத்தா கோயில் குளத்தில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருமுருகன்பூண்டி ராசாத்தா கோயில் குளத்தில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ராக்கியாபாளையம் ஐஸ்வர்யா கார்டன் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:
ராசாத்தா கோயில், ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ராக்கியாபாளையத்தில் உள்ள சாக்கடை நீர் அனைத்தும் ராசாத்தா கோயில் குளத்தில் கலப்பதால் குளம் மாசடைந்து குடியிருப்பு வாசிகளுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. எனவே குளத்தில் சாக்கடை நீர் கலக்காத வகையில் மாற்று வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். அதேபோல மகாலட்சுமி நகர், ஊமைசெட்டிபாளையம் ஆகிய பகுதியில் சாக்கடை, சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனகோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com