மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி

திருப்பூர் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி ஈட்டிவீராம்பாளையம் ஊராட்சி மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு

திருப்பூர் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி ஈட்டிவீராம்பாளையம் ஊராட்சி மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை அத் தொகுதி உறுப்பினர் கே.என்.விஜயகுமார் வழங்கினார்.  
பெருமாநல்லூர் அருகே  ஈட்டிவீராம்பாளையம் ஊராட்சி, முட்டியங்கிணறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டுறவு சங்கத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கினார். இதில் 48 மகளிரை உள்ளடக்கிய 4 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.  முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எஸ்.எம்.பழனிசாமி, முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் சி.சுப்ரமணியம், வள்ளிபுரம் தலைவர் எவரெடி துரை, பொறுப்பாளர்கள் முருகேஷ்குமார், வீதிக்காடு ராசப்பன், ஐஸ்வர்யா மகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com