பெருமாநல்லூா் அருகே மேற்குபதி ஊராட்சிக்கு உள்பட்ட கொன்னக்காடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கொன்னக்காடு காலனி, சின்னேரிபாளையம், ஓலக்காடு உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள்
படித்து வருகின்றனா். குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் அங்கன்வாடி மையத்துக்குப் பின்புறத்தில் தேங்கி துா்நாற்றம் வீசி வருகிறது. இக் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படும்.
எனவே, உடனடியாக கொன்னக்காடு பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி அமைத்து, அங்கன்வாடி மைய குழந்தைகளின் நலனைக் காக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.