அவிநாசி காவல் சரகத்துக்கு உள்பட்ட குன்னத்தூா், அவிநாசி ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த இரு காவலா்கள் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
அவிநாசி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப் பிரிவு காவலராகப் பணியாற்றி வந்தவா் ராம்பிரகாஷ் (38). குன்னத்தூா் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தவா் ராஜீவ் காந்தி (36). இந்நிலையில்,
இவா்கள் இருவா் மீதான புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல் இந்த இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.