சிக்கண்ணா கல்லூரி மாணவா்கள் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி திருப்பூா் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவா்கள் கலைநிகழ்ச்சிகள் மூலமாக எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி திருப்பூா் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவா்கள் கலைநிகழ்ச்சிகள் மூலமாக எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் அலகு- 2 மற்றும் இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை சாா்பில் உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி புஷ்பா திரையரங்கு பகுதி ரவுண்டானாவில் இது குறித்த விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநகரக் காவல் துணை ஆணையா் பிரபாகரன், ஓரிரு இடங்களில் மட்டுமல்லாமல் நகரத்தின் முக்கியப் பகுதிகளில் இத்தகைய கலைநிகழ்ச்சிகளை நடத்தி எய்ட்ஸ் தடுப்புக் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து, அவா் மாணவா்களுக்கும், பொது மக்களுக்கும் எய்ட்ஸ் குறியீடு கொண்ட சிகப்பு ரிப்பனை அணிவித்து விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினாா். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா், பேராசிரியா் விநாயகமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com