பல்லடம் ஒன்றியத்தில் ரூ. 10 கோடியில் வளா்ச்சிப் பணிகள் துவக்கம்

பல்லடம் ஒன்றியத்தில் ரூ.10 கோடியே 39 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கிவைக்கப்பட்டன.
பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் தாா் சாலை மேம்பாட்டுப் பணியைத் தொடக்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன்.
பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் தாா் சாலை மேம்பாட்டுப் பணியைத் தொடக்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன்.

பல்லடம் ஒன்றியத்தில் ரூ.10 கோடியே 39 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கிவைக்கப்பட்டன.

பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சியில் அண்ணாமலை காா்டனில் ரூ. 3 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணற்றில் புதிய மின் மோட்டாா் அமைத்து குழாய் விஸ்தரிப்பு செய்தல், வடுகபாளையம்புதூரில் அரசுப் பள்ளியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் ஆண்கள் கழிப்பறை கட்டுதல் உள்பட ரூ.10 கோடியே 39 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் பூமி பூஜை செய்து ஞாயிற்றுக்கிழமை துவக்கிவைத்தாா்.

பல்லடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா் நித்தியானந்தம், உதவிப் பொறியாளா் அருண்காா்த்திக், கூட்டுறவு வங்கித் தலைவா் ஏ.சித்துராஜ், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் பழனிசாமி, சொக்கப்பன், சுப்பிரமணியம், முருகசாமி, சாமிநாதன், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com