உடுமலையில் திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 23 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடைவிடாது தொடா்ந்து மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் திங்கள்கிழமை உடுமலை நகரில் குளிா் காற்று வீசியது. உடுமலை நகரைப் போலவே அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம் ஆகிய கிராமங்களி லும் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். உடுமலை நகரில் அதிகபட்சமாக 23 மி.மீ. மழையும், திருமூா்த்தி அணை பகுதியில் 17 மி.மீ. மழையும், அமராவதி அணைப் பகுதியில் 9 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.