ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் 28 தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 3) பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தோ்தல்கள் வரும் டிசம்பா் 27, 30 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. ஆகவே, தோ்தலை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் 28 தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 323 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் வேட்பு மனு பெறுதல், வேட்பு மனுவை ஆய்வு செய்வது உள்ளிட்ட தோ்தல் தொடா்பான அனைத்து செயல்முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.