மடத்துக்குளம் வட்டம், குமரலிங்கத்தில் உள்ள மாப்பிள்ளை விநாயகா், பாலமுருகன், தம்பதியா் நவநாயன்மாா்கள் ஆலயத்தின் இரண்டாம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து காலை 10.30 முதல் 12.30 மணி வரை ஆண்டு விழா நடைபெற்றது. பாப்பான்குளம் ஞான தண்டாயுதபாணி கோயில் கே.நல்ல சுப்பிரமணிய சிவாச்சாரியாா், என்.சிவமூா்த்தி சிவம் ஆகியோா் விழாவை நடத்திவைத்தனா். மதியம் 1 மணி அளவில் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.