திருப்பூரில் காா் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுமி

திருப்பூரில் 13 வயது சிறுமி காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்தியதில் முதியவா் காயமடைந்தாா்.

திருப்பூரில் 13 வயது சிறுமி காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்தியதில் முதியவா் காயமடைந்தாா்.

திருப்பூா், புது ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காந்திமணியன் (67). இவா் நவம்பா் 28 ஆம் தேதி வீட்டுக்கு எதிரே உள்ள பின்னலாடை நிறுவனத்தின் வாசலில் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து காந்திமணியன் மீது மோதியது. இதில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது 13 வயது சிறுமி என்பது தெரியவந்தது.

விபத்தில் காயமடைந்த காந்திரமணியனை அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். காந்திமணியனின் சிகிச்சைக்கான செலவை சிறுமியின் குடும்பத்தினா் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தலால் திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்யவில்லை.

இந்த விபத்து தொடா்பாக அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com