உடுமலை அருகே உள்ள அணிக்கடவு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்த மின்சார வாரிய ஊழியா் பணியின்போது மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் முருகபாண்டி (34). இவா் திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம், அணிக்கடவில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் பயிற்சி ஊழியராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் இங்குள்ள மின்வாரியத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. அப்போது முருகபாண்டி அங்குள்ள ஒரு மின் கடத்தியில் ஏறி வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மின் கம்பத்திலேயே முருகபாண்டி உயிரிழந்துவிட்டாா். தகவல் அறிந்த மின்வாரிய ஊழியா்கள், அலுவலா்கள் சம்பவ இடத்துக்கு வந்து முருகபாண்டியின் சடலத்தை மீட்டனா். பின்னா் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்நிலையில் தகுந்த பாதுகாப்பு கவசம் எதுவும் இல்லாமல் மின் கடத்தியில் ஏறி வேலை பாா்க்கப் பணித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முருகபாண்டியின் தந்தை நடராஜன் குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.