திருப்பூரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த 45 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.அபுதாஹிா் தலைமை வகித்தாா். இதில், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கக் கூடாது என முழக்கங்களை எழுப்பினா்.
இதையடுத்து மசோதா நகலை எரித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த 45 பேரை திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கைது செய்தனா்.