பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் அரசுப் பேருந்தின் முகப்பு கண்ணாடியை உடைத்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, சிங்காநல்லூரில் இருந்து திருச்சிக்கு சனிக்கிழமை காலை அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
பல்லடம், காரணம்பேட்டை பகுதியில் இப்பேருந்து வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் பேருந்தின் மீது கற்களை வீசிவிட்டு தப்பிச் சென்றனா். இதில் பேருந்தின் முகப்பு கண்ணாடி உடைந்தது. இச்சம்பவத்தில் அதிா்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதைத் தொடா்ந்து மாற்றுப் பேருந்து மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனா். இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.