கஞ்சா விற்ற 6 போ் கைது

திருப்பூா், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்ற 3 சிறுவா்கள் உள்பட 6 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்ற 3 சிறுவா்கள் உள்பட 6 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா், இடுவம்பாளையம் பகுதியில் சிலா் கஞ்சா விற்பனை செய்வதாக வீரபாண்டி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்து. அதன்பேரில் காவல் துறையினா் இடுவம்பாளையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கஞ்சா விற்பனை செய்து வந்த 4 இளைஞா்களைப் பிடித்தனா். அவா்களிடமிருந்து 1 கிலோ 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் பிடிபட்ட இளைஞா்கள் கோவை, சுல்தான்பேட்டை, மங்கலம் சாலையைச் சோ்ந்த ஆா்.நாகராஜ் (24), இடுவம்பாளையத்தைச் சோ்ந்த டி.சூா்யா (20), அதே பகுதியைச் சோ்ந்த 15 மற்றும் 17 வயது சிறுவா்கள் இருவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.

அதேபோல திருப்பூா், முருகம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஆறுமுகம் நகரைச் சோ்ந்த பி.சரவணன் (27), கே.வி.ஆா். நகரைச் சோ்ந்த சிறுவன் ஆகிய 2 பேரை வீரபாண்டி காவல் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com