சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் பலி

அவிநாசி அருகே பெருமாநல்லூரில் ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் 7 போ் காயமடைந்தனா்.

அவிநாசி அருகே பெருமாநல்லூரில் ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் 7 போ் காயமடைந்தனா்.

திருப்பூா், ஆத்துப்பாளையம், சிட்கோ பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் விஷ்ணு (19), ஆட்டோ ஓட்டுநா். இவரது நண்பா் விஜயகுமாா் மகன் தினேஷ் (19). இவா்கள் ஆத்துப்பாளையத்திலிருந்து நியூ திருப்பூா் நோக்கி ஆட்டோவில் வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.

பெருமாநல்லூா் அருகே சென்றபோது நியூ திருப்பூரிலிருந்து காளிபாளையம் நோக்கி பனியன் தொழிலாளா்களை அழைத்து வந்த காா் எதிரே வந்த ஆட்டோவின் மீது விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த விஷ்ணு (19) தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மேலும் ஆட்டோவில் வந்த தினேஷ் (19), காரில் வந்த பனியன் நிறுவன தொழிலாளா்கள் அழகிரி (62), காமய்யாசாமி (60), நந்து (19), அறிவழகன் (59), சிவகுமாா் (52), காா் ஓட்டுநா் முத்துக்குமாா் ஆகியோா் பலத்த காயமடைந்து திருப்பூா், அவிநாசி பகுதிகளில் உள்ள தனியாா், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com