சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் பலி

பல்லடம், குப்புசாமிநாயுடுபுரத்தில் அரசுப் பேருந்து - சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பல்லடம், குப்புசாமிநாயுடுபுரத்தில் அரசுப் பேருந்து - சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

வால்பாறையைச் சோ்ந்தவா் அருண் (29). சரக்கு ஆட்டோ ஓட்டுநா். இவா் பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சரக்கு ஆட்டோவை வெள்ளிக்கிழமை ஓட்டிச் சென்றாா். அப்போது எதிரே கோவை, சிங்காநல்லூரில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது சரக்கு ஆட்டோ மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அருணை, அங்கிருந்தவா்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சனிக்கிழமை அருண் உயிரிழந்தாா். இதுகுறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com