உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் என்எஸ்எஸ் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் கண்ணகி தலைமை வகித்தாா். என்எஸ்எஸ் மாணவி அகல்யா வரவேற்றாா். உடுமலை கல்வி மாவட்ட அலுவலா் பழனிசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விடுமுறை நாளிலும் மாணவா்கள் பணி மேற்கொள்வதைப் பாராட்டிப் பேசினாா். தொடா்ந்து, பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணிகளில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டனா்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவியருக்கு கல்வியியல் தொடா்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. என்எஸ்எஸ் அலுவலா் செ.சரவணன் முகாமுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாா். மாணவா் விஜய் நன்றி கூறினாா்.