அரசுப் பேருந்து மோதி பிகார் இளைஞர் சாவு

திருப்பூரில் அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பிகார் மாநில இளைஞர் உயிரிழந்தார்.

திருப்பூரில் அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பிகார் மாநில இளைஞர் உயிரிழந்தார்.
இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர், காசிபாளையம் சாலை ஈஸ்வரன் கோயில் அருகே திங்கள்கிழமை இரவு  ஒரே இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள தேநீர்க் கடை அருகில் இந்த இரு சக்கர வாகனம் மீது திருப்பூரில் இருந்து சிட்கோ நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில், இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து சென்ற பிகார் மாநிலத்தைச் சேர்ந்த என்.அனில்குமார் (24) உயிரிழந்தார்.  அதே மாநிலத்தைச் சேர்ந்த அஜய்பர்வின் (23) காயமடைந்தார். 
இது குறித்து திருப்பூர் ஊரக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்கி விபத்தை  ஏற்படுத்தி பிரேம் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com