திருப்பூரில் 21இல் எரிவாயு பயன்படுத்துவோர் குறைதீர் கூட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு பயன்படுத்துவோர் குறைதீர் கூட்டம்  பிப்ரவரி 21 ஆம் தேதி மாவட்ட வருவாய்

திருப்பூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு பயன்படுத்துவோர் குறைதீர் கூட்டம்  பிப்ரவரி 21 ஆம் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு பயன்படுத்துவோருக்கான குறைதீர்க்கும் கூட்டம் பிப்ரவரி 21 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி தலைமை வகிக்கிறார். இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு விநியோகஸ்தர்கள், எண்ணெய் நிறுவனப் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். ஆகவே, எரிவாயு பயன்படுத்துவோர் எரிவாயு இணைப்புப் புத்தகம்,  அடையாள அட்டையுடன் இக்கூட்டத்தில் பங்கேற்று குறைகளைத் தெரிவிக்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com