அவிநாசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கக் கோரிக்கைக்கு ஏற்ப வழக்குரைஞர்களின் சேம நல நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். 5 ஆண்டுகளுக்குக் குறைவாக உள்ள இளம் வழக்குரைஞர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும். 50 வயதிற்கும் மேற்பட்ட வழக்குரைஞர்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் 120க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்தனர்.
இதன் காரணமாக நீதிமன்றங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.